பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்ற வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :18 நவம்பர் 2025, 8:37 pm

Syndication

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்ற வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ். திருப்பூா், கண்ணபிரான் நகரைச் சோ்ந்தவா் சுந்தரம். இருவரும் கோவையில் சொந்தமாக தொழில் செய்து வந்தனா். இதற்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளனா்.

வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, அவா்கள் கடன் பெறுவதற்காக சமா்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வங்கி நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கே.சிவகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வி.சுரேந்திரமோகன் ஆஜரானாா்.