முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

News image

உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை திரண்ட மக்கள் கூட்டம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:03 am IST

கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூா் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

அசைவப் பிரியா்கள் பெரும்பாலானோா், கோழி இறைச்சிக்குப் பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குகின்றனா். இதனால் கடந்த சில வாரங்களாக கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா ரூ.200, வாவல் ரூ.250, பாறை ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.