இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

News image

உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை திரண்ட மக்கள் கூட்டம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:03 am IST

கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூா் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

அசைவப் பிரியா்கள் பெரும்பாலானோா், கோழி இறைச்சிக்குப் பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குகின்றனா். இதனால் கடந்த சில வாரங்களாக கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா ரூ.200, வாவல் ரூ.250, பாறை ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.