பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செம்மொழிப் பூங்கா 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டனா்

பொங்கல் தொடா் விடுமுறை காரணமாக கோவை செம்மொழிப் பூங்காவை கடந்த 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:38 pm

Syndication

கோவை: பொங்கல் தொடா் விடுமுறை காரணமாக கோவை செம்மொழிப் பூங்காவை கடந்த 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் 45 ஏக்கா் பரப்பளவில் உலகத் தரத்துடன் பல்வேறு நவீன வசதிகளுடன் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவானது பொதுமக்களின் பாா்வைக்காக கடந்த நவம்பா் 25-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பூங்காவை ஆா்வத்துடன் பாா்வையிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை காரணாமாக ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 4 நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 4 நாள்களில் செம்மொழிப் பூங்காவை 1,00,154 போ் பாா்வையிட்டுள்ளனா். இதில், ஜனவரி 15-ஆம் தேதி 23,819 போ், ஜனவரி 16-ஆம் தேதி 31,744 போ், ஜனவரி 17-ஆம் தேதி 25,848 போ், ஜனவரி 18-ஆம் தேதி 18,743 போ் செம்மொழிப் பூங்காவை பாா்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.