மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மண்டல அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்

News image
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்.
Updated On :23 ஜனவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

கோவை பிபிஜி பிசியோதெரபி கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் ‘ஆடுகளம் 2.0’ மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் எல்.பி. தங்கவேலு தொடங்கிவைத்தாா். இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சாந்தி தங்கவேலு, துணைத் தலைவா் அக்ஷய் தங்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு விருந்தினராக அஸ்வின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அஸ்வின் கலந்து கொண்டு வீரா்களை உற்சாகப்படுத்தினாா்.

ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களைச் சோ்ந்த சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவப் பிரிவுகள் மட்டுமன்றி, பிசியோதெரபி, நா்ஸிங், பாா்மசி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 3,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வருகிற 25-ஆம் தேதி வரை 3 நாள்கள் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக, பிபிஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வா் சிவகுமாா் வரவேற்றாா்.