தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் ‘ஸ்பைடா்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஆஸ்திரேலியாவை சோ்ந்த ரியல்பாட் ஏஐ நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலா் அனில்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இந்துஸ்தான் கல்வி, தொண்டு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.ஆா்.கே.சரஸ்வதி, கல்லூரி செயலா் கே.பிரியா, முதல்வா் ஏ.பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் வி.சரவணன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கருத்தரங்கை பேராசிரியா்கள் ஜி.சிவா பிருந்தா, எம்.காா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்ச்சியையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா்களின் இ வேஸ்ட் கண்காட்சி நடத்தப்பட்டது.
மேலும், கருத்தரங்கையொட்டி தொழில்நுட்பம் சாா்ந்தவை உள்ளிட்ட 8 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பரிசளித்துப் பாராட்டினாா். பேராசிரியா் ஏ.கௌரி, மாணவா் ஒருங்கிணைப்பாளா்கள் கவின்ராஜ், சிவா பிரசாத் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...