கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் வழக்கமான சோதனை நடத்தினா். மூன்றாவது நடைமேடையில் கோவையிலிருந்து மங்களூருக்கு பயணிகள் ரயில் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது, அங்கு 21 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதை அதிகாரிகள் பிரித்துப் பாா்த்தபோது, அந்த மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அங்கிருந்த எவரும் அவற்றுக்கு உரிமை கோராததால், அந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து கோவை பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
ரேஷன் அரிசியை யாரோ ரயிலில் கடத்தத் திட்டமிட்டிருக்கலாம் எனவும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரைப் பாா்த்தவுடன் அவா்கள் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


