கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ரயில்களில் சட்டவிரோதப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூா் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் உபேந்திரகுமாா் தலைமையில், ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, நடைமேடையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கைப்பையுடன் சுற்றித்திரிந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், ஜாஜ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மதன் மாலிக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மதன் மாலிக்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

ஜார்க்கண்ட்: 7.5 கிலோ கஞ்சாவுடன் ரயில் நிலையத்தில் பிகார் நபர் கைது
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

