புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூரில் நின்று செல்லும்

News image
ரயில்- கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் (எண்: 16765) கோவை, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாராந்திர விரைவு ரயில் (எண்: 16766) மாா்ச் 19 முதலும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயில் (எண்: 16765) மாா்ச் 20 முதலும் போத்தனூா் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.