ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இயந்திரம் வாங்குமிடத்திலேயே மானியம்: கோப்மா கோரிக்கை

மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இயந்திரங்கள் வாங்குமிடத்திலேயே மானியம் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும் என கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :12 மே 2013, 5:39 am IST

மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இயந்திரங்கள் வாங்குமிடத்திலேயே மானியம் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும் என கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

  இது தொடர்பாக கோப்மா தலைவர் கே.மணிராஜ் வெளியிட்ட செய்தி: சிறு குறுந்தொழில் முனைவோர் வாங்கும் இயந்திரங்களின் மதிப்பில் அரசு வழங்கும் மானியத் தொகை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  மாவட்டத் தொழில் மையம் மூலமாக மானியம் பெறுவதில் அரசின் சில நடைமுறை சட்ட விதிகளால் காலதாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால்  இயந்திரங்கள் வாங்கப்படும் இடங்களிலேயே பில் தொகையில் மானியம் பெறுவதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.

  மின்வெட்டு அதிகரித்துள்ள இச்சூழ்நிலையில் தொழில் முனைவோர்களுக்கு உதவ ஜெனரேட்டர் மானியத் தொகையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மானியத் தொகையை ஜெனரேட்டர் விநியோகஸ்தர் மூலமாக பில் தொகையில் பெறுவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் சூழ்நிலையில் அடுக்குமாடி தொழில் வளாகங்களை அமைக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு  அமைக்கும்போது சிறு குறுந்தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  நலிவடைந்த சிறு-குறு பம்ப்பெட் உற்பத்தியாளர்கள் மற்றும் வயதான ஏழைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பம்ப்செட் நல வாரியம் அமைக்க வேண்டும். கோவையில் உள்ள தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க முதல்வர் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.