மத்திய அரசின் திருத்தி அமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தரைவழி மின் இணைப்பு வழங்கும் திட்டப் பணிக்காக ரூ.310 கோடி ஒதுக்கப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தரைவழி மின் இணைப்பு அமைக்கும் பணி 2012 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அனைத்து நகரங்களிலும் கட்டமைப்புப் பணிகளை 2014 ஜூன் மாதத்துக்குள் ஒப்பந்த நிறுவனம் முடித்திருக்க வேண்டும். ஆனால், 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய இப்பணிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்வு நாள்கள், தேர்தல் பணி, மழைக் காலம் என பல்வேறு காரணங்களுக்காக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பணிகளை முடிக்க 2016 ஜூன் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.