வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி இருவர் காயம்

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வந்த  ஆம்புலன்ஸ் புதன்கிழமை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:02 am

DIN

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வந்த  ஆம்புலன்ஸ் புதன்கிழமை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(65). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வால்பாறை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் அங்கலக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கிட்டதால், ஓட்டுநர் கனகபாண்டியன்(40) ஆம்புலன்ஸை வேறு திசைக்குத் திருப்பியுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலை ஓரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கனகபாண்டியன் பலத்த காயமடைந்தார்.
உடல் நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட செல்லம்மாளுக்கு காயம் ஏற்படவில்லை. அவருடன் உதவிக்கு வந்த ஈஸ்வரன்(50) காயமடைந்தார். இதையடுத்து, வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கனகபாண்டியன் கோவை அரசு மருத்துவமனைக்கும், செல்லம்மாள், ஈஸ்வரன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.