47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 1.60 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு

காரமடையை  அடுத்த தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட  புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:27 am

DIN

காரமடையை  அடுத்த தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட  புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,   காரமடையை  அடுத்த தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் ரூ. 1.60 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகள்,  நூலகம்,  ஆய்வகம்,  2 கழிப்பிடங்கள் ஆகியவற்றை கொண்ட இருமாடி கட்டடம் கட்டப்பட்டது.  
இந்த புதிய பள்ளி கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.  அதைத் தொடர்ந்து புதிய கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,  கோவை ஆவின் இயக்குநர் பி.டி. கந்தசாமி,  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இந்திராணி,  துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் சிவகுமார்,  உதவி செயற்பொறியாளர் ஷோபனா,  பொறியாளர் சிவகுமார் உள்பட கிராம மக்கள் பலர்கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.