அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விலையில்லா ஆடுகள் தேர்வில் முறைகேடு? கிராம மக்கள் சாலை மறியல்

சூலூர் அருகே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:29 am

DIN

சூலூர் அருகே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,  மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயமணி,  அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஆனால்,  இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விலையில்லா ஆடுகளுக்கான பயனானிகள் தேர்வில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், செலக்கரச்சல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த  சூலூர் காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மறியலில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இதுதொடர்பாக  வரும் வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டம் கூட்டி விலையில்லா ஆடுகள் பெரும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும்,  அதில்,  தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.