சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கே.பி.ஆர். கல்லூரியில் தென்னிந்திய பல்கலை.இடையிலான செஸ் போட்டி

சூலூர் அருகே, அரசூரில் உள்ள கே.பி.ஆர்.தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:03 am

DIN

சூலூர் அருகே, அரசூரில் உள்ள கே.பி.ஆர்.தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதில்,  74 பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டன. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் 54 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பங்கேற்றனர்.
இப்போட்டியின் தொடக்கவிழா, கே.பி.ஆர்.கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் கே.பி.ராமசாமி, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை குழுத் தலைவர் செல்லதுரை, செயலாளர் செளந்திரராஜன், கல்லூரி முதல்வர் பொம்மன்னராஜா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர். கல்லூரியின் விளையாட்டுத் துறை இயக்குநர் தம்பிதுரை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஏழு சுற்றுகளாக நான்கு நாள்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணியினர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.