எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலைக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் "வியப்பூட்டும் விந்தைகள்' எனும் தலைப்பிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:03 am

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் "வியப்பூட்டும் விந்தைகள்' எனும் தலைப்பிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் அறிவியல் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியை கல்லூரிச் செயலர் சுவாமி கரிஷ்டானந்தா முன்னிலையில், சுவாமி புண்ணிய விரதானந்தர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தார்.
இக்கண்காட்சியில்,  கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணிப்பொறி அறிவியல், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்கள் அவர்களது துறைசார்ந்த அறிவியல் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அண்மைக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மேல்நிலைக் கல்வி சார்ந்த பாடத் திட்டத்தின் அடிப்படையில் செயல் விளக்க மாதிரிகளை வடிவமைத்து வைத்திருந்தனர்.
மேலும், விவசாயத் துறையின் முக்கியத்துவம், நீராதராத்தைச் சேமிக்கும் வழிமுறைகள், உணவை வீணாக்காமல் பயன்படுத்துவது மற்றும் செல்லிடப்பேசியை பயனுள்ள வகையில் உபயோகிப்பது ஆகியன தொடர்பான குறும்படக் காட்சியையும் தயாரித்துப் பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இக்கண்காட்சியை 18 தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,384 மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வீ.பொன்னுசாமி தலைமையில் துறை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.