விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கோவில்பாளையத்தில் திமுகவினர் சாலை மறியல்

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில்  சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:53 am IST

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில்  சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையன், மாவட்டப் பொருளாளர் மணி (எ) விஜயகுமார், ஒன்றியப் பொருளாளர் ராசு (எ) பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வெள்ளாணைப்பட்டி  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஆர்.ராஜன், பார்த்திபன், ஜீவா, மகளிர்அணி சார்பில் ரதி மனோகர், காங்கிரஸ் கட்சி சார்பில் நாகராஜ், மதிமுக சார்பில் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மறியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து,  பின்னர் மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.