பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

வால்பாறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை நகரப் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:50 am IST

வால்பாறை நகரப் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வால்பாறை வனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன.  தற்போது வால்பாறை நகரப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. நகரில் உள்ள வங்கி, கடைகள் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் அண்மையில் பதிவாகியிருந்தது. 
இந்நிலையில்,  திங்கள்கிழமை இரவு வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை வீட்டுக்கு மாடியில் இருந்த நாயைப் பிடித்துச் சென்றது. பாரத ஸ்டேட் வங்கி சாலையில் இருந்து அண்ணா நகர் செல்லும் படிக்கட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் மூன்று சிறுத்தைகள் சென்றுள்ளன.
  இதனையடுத்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பெரிய தடிகளுடன் நடந்து சென்றனர். சிறுத்தைகளை கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.