வால்பாறை நகரப் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வால்பாறை வனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. தற்போது வால்பாறை நகரப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. நகரில் உள்ள வங்கி, கடைகள் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் அண்மையில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை வீட்டுக்கு மாடியில் இருந்த நாயைப் பிடித்துச் சென்றது. பாரத ஸ்டேட் வங்கி சாலையில் இருந்து அண்ணா நகர் செல்லும் படிக்கட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் மூன்று சிறுத்தைகள் சென்றுள்ளன.
இதனையடுத்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பெரிய தடிகளுடன் நடந்து சென்றனர். சிறுத்தைகளை கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடுவானத்தில்..! அன்பே டயானா படத்தின் புதிய பாடல்!

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


