திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இன்று முழு அடைப்புப் போராட்டம்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவலர்கள்

கோவை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம்

Updated On :5 ஏப்ரல் 2018, 6:50 am IST

கோவை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாள்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால், கோவை மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
அதே போல், கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
மேலும்,  தொழிற்சங்களும் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுவதால் காவல் துறையினரின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.