திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வியாபாரியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

மே தின விழாவுக்கு பணம் தர மறுத்த வட மாநில இளைஞரைத் தாக்கியதாக  ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:20 am

DIN

மே தின விழாவுக்கு பணம் தர மறுத்த வட மாநில இளைஞரைத் தாக்கியதாக  ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர். 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (28).  இவர்,  கோவை,  வடவள்ளி உழவர் சந்தை அருகே தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி வருகிறார்.  இவரது கடைக்கு ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த்  (36) என்பவர் சனிக்கிழமை சென்றார்.  அப்போது,  சஞ்சய்குமாரிடம் மே தின விழாவுக்கு ரூ. 15 ஆயிரம் கேட்டுள்ளார்.  ஆனால் அவர் தரமறுத்துள்ளார்.  இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில்ஆத்திரமடைந்த ஆனந்த்,   சஞ்சய்குமாரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சஞ்சய்குமார் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீஸார் ஆனந்தைக் கைது செய்தனர்.  அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.