ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

தண்டவாளம் அருகே தொழிலாளி சடலம்: கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தகவல்

ரயில் முன் பாய்ந்து இறந்ததாகக் கருதப்பட்ட கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமாகத் தெரியவந்ததுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

ரயில் முன் பாய்ந்து இறந்ததாகக் கருதப்பட்ட கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமாகத் தெரியவந்ததுள்ளது.
  நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் அய்யப்பன் (47). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவரது சடலம் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சிங்காநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மீட்கப்பட்டது. 
  இது குறித்து ரயில்வே போலீஸார், சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அய்யப்பனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அய்யப்பனின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் இறந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
  இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அய்யப்பனை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் அவரது உடலை மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரியவந்தது. சிங்காநல்லூர் போலீஸார் இது தொடர்பான தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.