தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ஒழுக்கத்தை போதிக்காமல் செயலில் காட்ட வேண்டும்: குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறியுள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 7:42 am IST

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறியுள்ளார்.
குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் குறித்தும், குழந்தைகளைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் "எப்படித்தான் வளர்ப்பதோ?' என்ற நிகழ்ச்சி கோவை ஸ்ரீ  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
இதில், 7 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கான இரண்டாவது வார நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது. 
இதில் பங்கேற்று பிருந்தா ஜெயராமன் பேசியதாவது:  பிள்ளைகளுக்குப்  பெற்றோர்களே கண்கண்ட முதல் உதாரணம். பிள்ளைகளின் எதிரில் பொய் பேசுவது, மறைத்துப் பேசுவது, புறம்பேசுவது, சப்தமாகப் பேசுவது,  அடிப்பது போன்ற செயல்களை பெற்றோர்கள் செய்தால் பிள்ளைகளும் அதையே பிரதிபலிப்பார்கள். பிள்ளைகள் மேம்பட்டவர்களாகவும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எதிரில் பொய் பேசாமல், மறைக்காமல், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. அப்போதுதான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் நாம் வெற்றியடைய முடியும்.  பிள்ளைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அன்பினாலும், பொறுமையினாலும் மட்டுமே அவர்களை நல்வழிக்கு மாற்ற முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.