எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: ஒரே நாளில் ஆயிரம் மனுக்கள் குவிந்தன

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:37 am IST

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஒன்றிய அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை என புகார் இருந்து வருகிறது. இதுகுறித்து, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனுக்கு புகார் சென்றது. 
அதையடுத்து, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்படி, கிணத்துக்கடவு தனியார் திருமண மண்டபத்தில் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிணத்துக்கடவு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த குறைதீர் கூட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள்  உறுப்பினர் முத்துக்கருப்பண்ணசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி,  அதிமுக நிர்வாகிகள் டி.எல்.சிங், மூர்த்தி, வீராசாமி, வழக்குரைஞர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிணத்துக்கடவு ஊராட்சி  ஒன்றியத்துக்கு உள்பட்ட சோழனூர், வரதனூர், கக்கடவு, காணியாலாம்பாளையம், கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், ஆண்டிபாளையம், சிறுக்களந்தை, பெரிய களந்தை, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், மெட்டுவாவி, பணப்பட்டி, வடசித்தூர், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, குருநல்லிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம், நல்லட்டிபாளையம், முள்ளுப்பாடி ,கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், கோவிந்தாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட  பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குறைதீர் கூட்டத்தில் குவிந்தனர். 
ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மனுக்களை வழங்கினர். காலை முதல் மதியம் 2.30 மணி வரை தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய ஆயிரத்துக்கு  மேற்பட்ட மனுக்கள் ஒரே நாளில் குவிந்ததால் அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டது. 
இந்த மனுக்களின் மீது பரிசீலனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் உறுதி அளித்தார். 
இந்தக் கூட்டத்தில்,  54 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. வட்டாட்சியர்கள் விமலா, ஜெயந்தி உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.