மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் முறையாக இயங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுக்கரை கடை வீதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு புதிதாக ஆதார் பெற விண்ணப்பிக்கவும், ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தினமும் பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த மையம் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லையாம். அவ்வாறு பணியில் இருந்தாலும் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாகக் கூறி அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, ஆதார் மையத்துக்கு பணியாளர்கள் சரியான நேரத்தில் வரவும், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை காக்க ஸ்டாலின் போராட்டம்: இரா. முத்தரசன் பிரசாரம்

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

திருச்சிக்கு விஜய், ராகுல் வருகை?

பணமதிப்பிழப்பு போல தொகுதி மறுசீரமைப்பும் தோல்வியில் முடியும்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

