திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

மாநில அளவிலான எறிபந்து போட்டி: கிருஷ்ணா வித்யாலயா பள்ளி சாதனை

பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான எறிபந்துப் போட்டியில் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. 

Updated On :5 நவம்பர் 2018, 7:41 am IST

பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான எறிபந்துப் போட்டியில் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. 
பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வால்பாறை, ஆனைமலை, கோட்டூர் சுற்றுப் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற அணிகள், சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றன. இதில் திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான எறிபந்துப் போட்டியில் பங்கேற்றனர். இறுதி ஆட்டத்தில்
சென்னை வேலம்மாள் பள்ளி அணியும், கிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணியும் மோதின.
இதில் வேலம்மாள் பள்ளி அணி வெற்றிபெற்றது. கிருஷ்ணா வித்யாலாய பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.  இந்நிலையில்,  போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை பள்ளியின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி கிரி, தாளாளர் கலையரசி, தலைமையாசிரியை முத்துலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்  ஆசாத், தேவானந்த் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.