மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர். கோவை மாவட்டம்,

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:15 pm

DIN

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையில், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியைச் சேர்ந்த வீரன் மகன் வேலுசாமி, தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் ஜெகதீஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள், கடையின் அன்றைய விற்பனைத் தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் காங்கேயம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், வேலுசாமி, ஜெகதீஷ் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர்.
நிலைகுலைந்த அவர்களது முதுகு, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள், வேலுசாமி, ஜெகதீஷ் ஆகியோர் வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
காயம் அடைந்த இருவரும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சூலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.