சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தனியே இருந்த பெண்ணை மிரட்டி 17 பவுன் நகையை சனிக்கிழமை இரவு கொள்ளை அடித்துச் சென்றனர்.
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள நஞ்சப்ப தேவர் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர், ராவத்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளவரசி (33), மகன் மனோஜ் (7) ஆகியோர் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
அப்போது வீட்டின் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த பருப்பை எடுத்து வருவதற்காக இளவரசி சென்றபோது இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அதைப் பார்த்த இளவரசி உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது, கொள்ளையர்கள் இருவரும் மனோஜை பிடித்து அவரது கழுத்தைக் கத்தியால் அறுத்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, இளவரசி அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருப்பத்தூா்-திருவண்ணாமலை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்தி எதிரொலி.. திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

