கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் விவரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு, பருவ மழை பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இத் திட்டம் அறிவித்த மறுநாளான செவ்வாய்க்கிழமையே தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இரண்டு வார்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மாநகராட்சியால் ஒப்பந்த அடிப்படையில் 50 பேர் (அனிமேட்டர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிப்பதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் ஆகியவை குறித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதே போல ஊரகப் பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்

நாட்டில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின் வசதி, கழிப்பறைகள் இல்லை! நீதி ஆயோக்

வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம்! விஜய் பதிவு

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

