11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வாழை இலை விற்பனைக்கு ஒருங்கிணைந்த சந்தை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வாழை இலை விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோவையில் ஒருங்கிணைந்த சந்தை

Updated On :25 பிப்ரவரி 2019, 10:10 am IST

வாழை இலை விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோவையில் ஒருங்கிணைந்த சந்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மேட்டுப்பாளையம், சோமனூர் மற்றும் நொய்யல் படுகை பகுதிகளில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. 
 நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 முதல் 3 லட்சம் வாழை இலைகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக் காலங்களில் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. 
 தற்போது பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்த பிறகு சிறு உணவகங்களிலும் வாழை இலைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 ஆனால், வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே வாழை இலைகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே வாழை இலை விற்பனைக்கு என ஒருங்கிணைந்த சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாவட்டத்  தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
 கோவை மாவட்டத்தில், 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இலை வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இலைகளை வியாபாரிகளே நேரடியாக அறுத்து எடுத்துக் கொள்கின்றனர். 100 இலைகள் அடங்கிய ஒரு கட்டு சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வரையில் கொடுக்கின்றனர்.
 ஆனால், வியாபாரிகள் அதனை ரூ.700 முதல் ரூ.800 வரைக்கும் விற்பனை செய்கின்றனர். இதனால், வியாபாரிகளுக்கு ரூ.500 வரையில் லாபம் கிடைக்கிறது. இதில் உற்பத்தி செய்யும் விவசாயிகள் உரிய லாபம் கிடைப்பதில்லை.
 இதனால், கோவையில் தக்காளி மற்றும் மற்ற காய்கறிகளுக்கு தனியாக சந்தை உள்ளது போல் வாழை இலை விற்பனைக்கும் ஒருங்கிணைந்த சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். வாழை சாகுபடி அதிகமாக உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.