கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகவின் (24). இவர், காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்த செல்வகவின் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து, உறவினர் ஒருவரின் அறிவுரைப்படி செல்வகவின், அவரது தந்தை சுப்பிரமணி (56), மாமனார் கந்தசாமி (52) ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டில் மூல நோய்க்கு சிகிச்சை பெற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவகிரியில் இருந்து பாலக்காடுக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
காரை மாமனார் கந்தசாமி ஓட்டி வந்துள்ளார். சிகிச்சை முடிந்து மூவரும் சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது, பொள்ளாச்சி - பாலக்காடு நெடுஞ்சாலையில் கருமாபுரம் பாலத்தின் மீது கார் வந்த போது, அரியலூரில் இருந்து பாலக்காட்டுக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, காரின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி, பாலத்தின் தடுப்புச் சுவற்றை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுப்பிரமணியன், கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வகவினை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வகவின் உயிரிழந்தார். பள்ளத்தில் கவிழ்ந்த காரை கிரேன் மூலம் மீட்ட போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காருக்குள் சிக்கிய கந்தசாமியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டியன் வழக்குப் பதிவு செய்து கேரள மாநிலம், கோழிகோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உண்ணிகண்ணன் (50) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


