நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஆர்.வி. கல்லூரியில் விதைப் பந்துகள் தயாரிப்பு பயிலரங்கம்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை டாக்டர் ஆர்.வி கலை, அறிவியல் கல்லூரியில் விதைப் பந்து தயாரிப்பு குறித்து

Updated On :23 ஜனவரி 2019, 9:19 am IST

மேட்டுப்பாளையம் அருகே காரமடை டாக்டர் ஆர்.வி கலை, அறிவியல் கல்லூரியில் விதைப் பந்து தயாரிப்பு குறித்து பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதற்கு, கல்லூரிச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  வே.சுகுணா முன்னிலை வகித்தார். அவிநாசி ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி,  ரா.பத்மபிரியா ராமசாமி ஆகியோர் மாணவ , மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும் , இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப் பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1,300 விதைப்பந்துகளை தயார் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை நட்புச் சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் கி.சின்னராஜ், அ.செந்தில்குமார் செய்திருந்தனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.