கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் வியாழக்கிழமை (ஜனவரி 24) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் மக்கள் நெருக்கம் மிகுந்த 73 ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பெரிய அளவிலான தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. இதில் மும்பை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தக் கொடிக்கம்பத்தை கோட்ட மேலாளர் சுப்பாராவ் வியாழக்கிழமை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். முன்னதாக இதன் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


