சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மின் கேபிள்களில் புதன்கிழமை தீபற்றியது. சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள மின் கேபிள்களில் புதன்கிழமை மதியம் தீ பற்றியது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். உதவி மண்டல தொலை தொடர்பு அலுவலர் சுதா கூறியதாவது:
அலுவலக நுழைவு வாயிலில் உள்ள அறையில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சுவரில் பதிக்கப்பட்டு உள்ளது. இதில், திடீரென கருகிய வாசனை வந்தது. உடனே இது குறித்து சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து கேபிள்களை சோதனை செய்தனர் என்றார்.
இதுகுறித்து சூலூர் தீயணைப்பு அலுவலர் கூறுகையில், மின்கசிவால் தீப்பிடித்துள்ளது. உடனடியாக தகவல் கிடைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. கருகிய கேபிள்கள் மேல் மேற்கொண்டு தீ பரவாத வகையில் உலர்ந்த ரசாயன பொடி தூவப்பட்டுள்ளது என்றனர்.
பாதுகாப்பு காரணம் கருதி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சூலூர் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் சூலூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சிக்னல் மதியம் முதல்
சரியாக கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


