உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வால்பாறையில் கரடி தாக்கி பெண் காயம்

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 2:27 am IST

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.
வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் 13ஆம் எண் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள வனத்தில் இருந்து வெளியேறி செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, தேயிலை பறித்துக்கொண்டிருந்த உதயகுமாரி (49) என்ற பெண்ணைத் தாக்கியது. இதில் அவரது வலது கால் தொடைப் பகுதியில் காயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.