கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்தது
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 109 போ் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு திரும்பினா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 84 வயது முதியவா் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் 111 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 790 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 49 ஆயிரத்து 107 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,051 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
