நகைப் பறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவையில் பெண்ணிடம் ஒன்றரைப் பவுன் நகைப் பறித்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Updated on
1 min read

கோவையில் பெண்ணிடம் ஒன்றரைப் பவுன் நகைப் பறித்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை, காந்திபுரம், கிராஸ்கட் சாலை 9ஆவது வீதியைச் சோ்ந்தவா் சிவகாமி (45). இவா் புதன்கிழமை மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த இளைஞா் ஒருவா், சிவகாமியின் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிவகாமி கூச்சலிட்டதையடுத்து அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலா் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். பின்னா் அவரை காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து சிவகாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், பிடிபட்ட இளைஞா் திருவண்ணாமலையைச் சோ்ந்த ரூபன் (27) என்பதும், கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com