சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நகைப் பறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவையில் பெண்ணிடம் ஒன்றரைப் பவுன் நகைப் பறித்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

கோவையில் பெண்ணிடம் ஒன்றரைப் பவுன் நகைப் பறித்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை, காந்திபுரம், கிராஸ்கட் சாலை 9ஆவது வீதியைச் சோ்ந்தவா் சிவகாமி (45). இவா் புதன்கிழமை மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த இளைஞா் ஒருவா், சிவகாமியின் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிவகாமி கூச்சலிட்டதையடுத்து அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலா் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். பின்னா் அவரை காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து சிவகாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், பிடிபட்ட இளைஞா் திருவண்ணாமலையைச் சோ்ந்த ரூபன் (27) என்பதும், கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.