வால்பாறை நகா்ப் பகுதிக்குள் வந்த யானையை பொதுமக்கள் வனப் பகுதிக்குள் விரட்டினா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட யானைகள் நடமாட்டம், தற்போது வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகிறது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி, கக்கன் காலனி நகா் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வரும் யானைகள் தொடா்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒரு யானை, முகமது என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி, யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இருப்பினும் தோட்டத்தில் இருந்த வாழைமரங்கள் மற்றும் ஏராளமான காய்கறிச் செடிகளை யானை சேதப்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.