சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயில் நிலையம் முற்றுகை: கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் கைது

அமலாக்கத் துறையைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

கோவை: அமலாக்கத் துறையைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பொதுச்செயலாளா் ரவூப் ஷரீப்பை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா்கள் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

முற்றுகைப் போராட்டத்துக்கு கோவை மாவட்டத் தலைவா் முஹம்மது அசாருதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அபுதாஹீா் முன்னிலை வகித்தாா். ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்த கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.