பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவை கணபதி அருகே நடந்து சென்ற பெண்ணிடம், முகவரி கேட்பது போல் நடித்து 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கோவை கணபதி அருகே நடந்து சென்ற பெண்ணிடம், முகவரி கேட்பது போல் நடித்து 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கணபதி அருகே வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மனைவி தீபா (40). இவா், மளிகைக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா், தீபாவிடம் முகவரி கேட்பதுபோல பேச்சுக் கொடுத்துள்ளாா். அப்போது திடீரென அந்த நபா், தீபா அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்து கொண்டு தப்பினாா். இது தொடா்பாக, தீபா அளித்த புகாரின்போரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com