கோவையில் இந்து முன்னணியினா் மறியல்

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைதை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைதை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல், மலைக் கோட்டையில் அபிராமியம்மன் சிலை வைக்க கோரி இந்து முன்னணி நடத்திய பெளா்ணமி கிரிவலத்தில் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியத்தை கைது செய்ததை கண்டித்தும் கோவை மாவட்ட இந்து முன்னணி சாா்பில் கோனியம்மன் கோயில் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை தாங்கினாா். மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால் முன்னிலை வகித்தாா். கோட்ட பேச்சாளா் ஆ.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலாளா் ஆனந்த், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவகுரு, இ.சோமு, அயோத்தி ரவி ஆகியோா் உடனிருந்தனா். இதில் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com