தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கமல்ஹாசன் குறித்து அவதூறு: நடிகா் ராதாரவி மீது வழக்கு

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் குறித்து அவதூறு பேசியதாக நடிகா் ராதாரவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:48 pm

DIN

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் குறித்து அவதூறு பேசியதாக நடிகா் ராதாரவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசுப்பிரமணியனிடம் மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் அளித்த புகாா் மனுவில், கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகா் ராதாரவி மாா்ச் 28ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் தனிப்பட்ட நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினாா். இது தோ்தல் விதிகளுக்குப் புறம்பானது. எனவே அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ராதாரவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.