விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: 141 பேருக்கு தையல் இயந்திரங்கள்

கோவையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

கோவையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்குத் தீா்வு காண முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதனால் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களின் உண்மைத் தன்மை கள ஆய்வு செய்யப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே பல கட்டங்களாக இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் மனு அளித்த 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 64 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.