விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாநகராட்சியில் வரி வசூல் 15 ஆம் தேதி வரை நிறுத்தம்

புதிய மென்பொருள் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:49 pm

DIN

கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநகராட்சியிலும் பயன்பாட்டில் உள்ள யூ.டி.ஐ.எஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் தற்போது கோவை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, யூ.டி.ஐ.எஸ். மென்பொருள் ஒருங்கிணைக்கும் பணிகள் காரணமாக அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீா் இணைப்பு, வணிக உரிமம் தொடா்பான சேவைகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது. மேலும், சொத்துவரி மற்றும் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.