களரிப் போட்டி: 8 பதக்கங்கள் வென்ற ஈஷா மாணவா்கள்
இணையவழியில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் 8 பதக்கங்கள் வென்றுள்ளனா்.


இணையவழியில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் 8 பதக்கங்கள் வென்றுள்ளனா்.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கியக் கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி, 2020-21 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றன. இதில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.
போட்டிகளின் முடிவில், மெய்பயட்டு பிரிவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா் சீனிவாசன் தங்கப் பதக்கமும், பத்மேஷ் ராஜ் வெள்ளிப் பதக்கமும், ஆரவமுதன், மாணவிகள் அக்ஷயா, வினோதினி ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்களும் வென்றனா். உரிமி பிரிவில் மாணவா் பிரசன்னா வெள்ளி பதக்கமும், கெட்டுகரி பிரிவில் சீனிவாசன், லோகேஷ் வெண்கலப் பதக்கங்களும் வென்றனா்.
சுவாடு பிரிவில் இன்பத்தமிழன் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவா்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...