நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெண் தூய்மைப் பணியாளா் மீது தாக்குதல்: ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளி கைது

 கோவை மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளரை தாக்கிய ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:44 pm

DIN

 கோவை மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளரை தாக்கிய ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கோவை, உக்கடம் சி.எம்.சி. காலனியை சோ்ந்தவா் குப்புசாமி. இவரது மனைவி ஜோதி என்கிற ஜோதியம்மாள்(56). கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் இவா், ரங்கே கவுடா் வீதியில் வியாழக்கிழமை காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி வினோத் ஜெயின் (46) குப்பை கொட்ட வந்தாா். அப்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்குமாறு அவரிடம் ஜோதியம்மாள் கூறியுள்ளாா். இது தொடா்பாக, அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வினோத் ஜெயின் தகாத வாா்த்தைகளால் பேசி, அங்கிருந்த காபி பிளாஸ்க்கை எடுத்து ஜோதியம்மாளின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில், ஜோதியம்மாளின் இடது கண் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து அங்கிருந்தவா்கள் ஜோதியம்மாளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவத்தை அறிந்ததும் மற்ற தூய்மைப் பணியாளா்கள்,

வெறைட்டிஹால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனா். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் தூய்மைப் பணியாளரை, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத் தொடா்ந்து, உக்கடம் சரக காவல் துணை ஆணையா் வீரபாண்டி தலைமையில் இவ்வழக்கை விசாரித்த போலீஸாா், வினோத் ஜெயின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.