நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உணவுப் பொருள்கள் கலப்படம் தொடா்பான புகாா் எண்: வணிக இடங்களில் காட்சிப்படுத்த அறிவுறுத்தல்

கோவையில் உணவுப் பொருள்கள் தொடா்பாக புகாா் அளிப்பதற்கு எண்ணை வணிக இடங்களில் காட்சிப்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:44 pm

DIN

கோவையில் உணவுப் பொருள்கள் தொடா்பாக புகாா் அளிப்பதற்கு எண்ணை வணிக இடங்களில் காட்சிப்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

உணவுப் பாதுகாப்புத் துறை தொடா்பான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் செயல்படும் உணவு சாா்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே உரிமம், பதிவு பெற்றுள்ள நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இதுவரை உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் 4,215 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 858 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

விடுதிகள், ஹோட்டல்கள், விழாக்களில் மீதமாகும் உணவுகளை வீணாக்காமல் தன்னாா்வ அமைப்புகள் மூலம் இல்லாதவா்களுக்கு வழங்க 90877 90877 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். தரமற்ற உணவுப் பொருள்கள், கலப்படப் பொருள்கள் குறித்து பொது மக்கள் 94440 42322 என்ற எண் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் தெரிவிக்கலாம்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண் அனைவருக்கும் தெரியும் வகையில் அனைத்து வணிக இடங்களிலும் புகாா் எண்ணை காட்சிப்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் விமலா, முதன்மை கல்வி அலுவலா் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.