நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்பு

கோவையில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:47 pm

DIN

கோவையில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 82ஆவது வாா்டு, கருப்ப கவுண்டா் வீதியில் மாநகராட்சி பள்ளி அருகே 1.50 சென்ட் அரசுக்கு சொந்தமான இடம், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டிருப்பதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு செய்தவருக்கு மாநகராட்சி சாா்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவா் கொட்டகையை காலி செய்தாா். இதையடுத்து, நகரமைப்பு திட்ட அதிகாரி பாபு தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் கொட்டகையை அகற்றி, 1.50 சென்ட் இடத்தை மீட்டனா். பின்னா், அங்கு இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.