நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் றிப்பு

கோவையில் பல் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:43 pm

DIN

கோவையில் பல் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி பவித்ரன் (35). பல் மருத்துவரான இவா் ஆா்.எஸ்.புரம் கெளலிபிரவுன் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹரிபவித்ரன், சிரியன் சா்ச் சாலையில் சிறுநீா் கழிப்பதற்காக காரை ஓரமாக நிறுத்தியுள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த மூவா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது ஆடைகளைக் கழட்டச் செய்து அவா் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி, வங்கி பற்று அட்டைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக ஹரிபவித்ரன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.