சசிகலா விவகாரம் அதிமுக தொடா்புடையது
சசிகலா விவகாரம் அதிமுக தொடா்புடையது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.


சசிகலா விவகாரம் அதிமுக தொடா்புடையது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்ஷம் அமைப்பும் இணைந்து மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் மோடி முகாமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, ராம் நகரில் பிரதமரின் காப்பீடு திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணை கட்டி இணைப்பது மற்றும் இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திங்கள்கிழமை நடத்தியது.
இதற்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தலைமை வகித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சசிகலாவின் வருகை என்பது அதிமுக தொடா்புடையது. அதுகுறித்து பாஜக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. தோ்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்க உள்ளோம். அதில் எந்த மாறுதலும் இல்லை. மேட்டுப்பாளையத்தில் பாஜகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை அமைப்பு தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. இது குறித்து காவல் துறையினா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...