மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் இன்று தொடங்கிவைக்கிறாா்

கோவை அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:42 pm

DIN

கோவை அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) நிதியுதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டடங்கள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்காக ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கட்டடத்துக்கு மட்டும் 110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த இடத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த பழையக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

இதனைத் தொடா்ந்து, சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.