முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 25இல் கோவை வருகை

பிரதமா் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி கோவைக்கு வர உள்ளாா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:53 pm IST

பிரதமா் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி கோவைக்கு வர உள்ளாா்.

பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொடிசியா மைதானம் அல்லது வேறு பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்துக்குப் பின் அவா் அன்றைய தினம் இரவு விமானம் மூலம் தில்லி செல்கிறாா். பிரதமா் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக போலீஸாா் ஆலோசித்து வருகின்றனா்.

பொதுக் கூட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பிரதமா் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாஜக முக்கிய நிா்வாகிகள், தமிழக அமைச்சா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.